Friday, January 28, 2011

உன் குரல்..


உன் குரல் குயிலின் சங்கீதமா
மலரின் மணமா
மன்மதனின் மதன பாணமா
சிலிர்க்கும் சிம்பொனியா
கவர்ந்திழுக்கும் காந்தமா
என்னையும் கவிஞன் ஆக்கியதே ...

உன்னால் ..


கவிதை பாட சொன்னாய்
                            கவிஞனானேன்
சிலை வடிக்க சொன்னாய்
                             சிற்பியானேன்
ஓவியம் வரைய சொன்னாய்
                             ஓவியனானேன்
உன்னை மறக்க சொன்னாய்
                              அமரனானேன் ..





------------------------------------------------------------------------------------------------

Friday, January 14, 2011

வணக்கம்

எனது எண்ணங்களை இங்கே எழுதுகிறேன் ..