Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, April 15, 2011

என்னில் நீ..

இரவாக நான்
என்னில்
நிலவாக நீ ..

மலராக நான்
என்னில்
மணமாக நீ

கனியாக நான்
என்னில்
சுவையாக நீ

உடலாக நான்
என்னில்
உயிராக நீ

Sunday, February 13, 2011

அன்பு செய்..



சாதியை ஒழிக்க
அன்பு செய்
சமத்துவம் உருவாக்க
அன்பு செய் ..

மதங்களை மண்ணாக்க
அன்பு செய்
மனங்களை ஒன்றாக்க
அன்பு செய் ..

வறுமையை போக்க
அன்பு செய்
வாழ்க்கை செழிக்க
அன்பு செய் .

Friday, January 28, 2011

உன் குரல்..


உன் குரல் குயிலின் சங்கீதமா
மலரின் மணமா
மன்மதனின் மதன பாணமா
சிலிர்க்கும் சிம்பொனியா
கவர்ந்திழுக்கும் காந்தமா
என்னையும் கவிஞன் ஆக்கியதே ...

உன்னால் ..


கவிதை பாட சொன்னாய்
                            கவிஞனானேன்
சிலை வடிக்க சொன்னாய்
                             சிற்பியானேன்
ஓவியம் வரைய சொன்னாய்
                             ஓவியனானேன்
உன்னை மறக்க சொன்னாய்
                              அமரனானேன் ..





------------------------------------------------------------------------------------------------